அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் படிக்க உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்து துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடந்தது. கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் தற்போது நடக்கிறது. தற்போது சில மாவட்டங்களில் பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிந்துள்ளன. 22ம் தேதியுடன் இந்த கல்வியாண்டு முடிவடைகிறது. 23ம் தேதிக்கு பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியரில் 1 முதல் 8ம் வகுப்பு வரை யாரையும் பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் உள்ளது. அதனால் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால் 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி அடையாவிட்டாலும், பிளஸ் 1 மாணவர்கள் தேர்ச்சி அடையாவிட்டாலும் அவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்விச் செயலாளர் கூறியுள்ளது தலைமை ஆசிரியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவியருக்கு கோடை விடுமுறை நாட்களிலும் வகுப்பு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதும் ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து வரும் ஆசிரியர்கள் கோடை வகுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை